நம் அனுதின வாழ்வில் கர்த்தர்மேல் விசுவாசம் வைக்கும்பொழுது, நம் விசுவாசத்தின்படியே அவர் நாம் விரும்புவதை தந்தருளுவார்.
நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் அதிக நேரம் செலவழிக்கும்போது, கர்த்தர் உங்களைக்கொண்டு மற்றவர்களுக்கு தீர்க்கதரிசனம் உரைப்பார்.
ஆண்டவர் இயேசு தம்முடைய சீஷர்கள்மீது மட்டுமல்ல, தம்மை வெறுத்தவர்கள்மீதும் அன்பு கூர்ந்தார்.
தேவனை முழு இருதயத்துடன் தேடுங்கள் அவர் உங்களை ஆதரித்து, செம்மையான பாதைகளில் வழிநடத்துவார்.
கர்த்தர் நம்மை தம்முடைய பரிசுத்தத்தினால் மட்டுமல்ல, சந்தோஷத்தினாலும் நிரப்புவார்.
ஆண்டவர் இயேசு இந்த உலகிற்கு வந்து, ஊழியம் செய்ததற்கும், சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டதற்கும் இந்த அன்பே காரணம்.
இயேசுவின் அன்பு ஒருக்காலும் ஒழியாது அந்த அன்பு முடிவுபரியந்தம் நமக்குள் நிலைத்திருக்கும்.
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் யாவும் வங்கி காசோலைகள் போன்றவை அதன் மூலம் நீங்கள் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்று அனுபவிக்கலாம்.